logo
ஈரோடு மாவட்டம்,  அரசூர் அருகே சாலையின் குறுக்கே யானைகளின் நடமாட்டம்

ஈரோடு மாவட்டம், அரசூர் அருகே சாலையின் குறுக்கே யானைகளின் நடமாட்டம்

23/Oct/2020 09:30:33

ஈரோடு மாவட்டம்,  அரசூர் அருகே சாலையின் குறுக்கே யானைகளின் நடமாட்டத்தால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்லும் நிலை உள்ளது

இந்தச்சாலையில் லாரிகளை வழிமறித்து  கரும்புகளை எடுத்து உண்பதற்காக  யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி சாலைகளுக்கு வருகின்றன.அதன் பிறகு வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து  யானையை காட்டிற்குள் விரட்டுவதும் வழக்கமாகும்.

நள்ளிரவில்  காட்டைவிட்டு வெளியே வந்து யானை லாரிகளை வழிமறித்து கரும்பு உள்ளதா என சோதனையில் ஈடுபடுவது லாரி ஓட்டுனர்களை அச்சத்தில் ஆழ்த்தியது. 


Top