logo
மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்  விரைவில் மகிழ்ச்சியான செய்தி  வரும் : அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன்

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விரைவில் மகிழ்ச்சியான செய்தி வரும் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

23/Oct/2020 01:46:02

ஈரோடு: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் பெறுவது தொடர்பாக தமிழக மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும்  விரைவில் மகிழ்ச்சியான செய்தி வர உள்ளது என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் .

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு 1 லட்சம் போர்வைகளை 6 லாரிகள் மூலம்  அனுப்பும் பணியை இன்று தொடக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன்  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஒரு லட்சம் போர்வைகள் அனுப்ப முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரூபாய் 3.30 கோடி மதிப்பிலான போர்வைகள் அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எந்த மாநிலம் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட் டாலும் தமிழக அரசு  உதவுகிறது. 

அதன்படி, தெலங்கானா மாநிலத்திற்கு தற்போது லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு  (டெட் தேர்வு)  தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 7 ஆண்டுக ளுக்குள் ஆசிரியர் பணியிடங்கள் அரசு பள்ளிகளில் பெற தகுதி படைத்தவர்கள். 
ஆனால் அப்படி பெற முடியவில்லை என்பதால் அவர்கள்  டெட் தேர்வு சான்றிதழை நீட்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
அதன்படி முதலமைச்சர் கடந்த மாதம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அவர்களுக்கான தகுதி தேர்வு சான்றிதழுக்கான கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென கோரினர். அதன்படி, தற்பொழுது ஒருமுறை டெட் தேர்வில் பாஸ் செய்தவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் பதவி பெறுவதற்கு தகுதி படைத்தவர்கள் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு ள்ளது. இதன் மூலம்  நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. 

மாநில அரசைப் பொறுத்தவரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவ இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் பெறுவதற்கு அரசு சட்டம் இயற்றி உள்ளது. இதற்காக கவர்னரின்  ஒப்புதல் பெறுவதற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயகுமார் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
 எனவே  தமிழக மக்களுக்கும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும்  விரைவில் மகிழ்ச்சியான செய்தி வர உள்ளது.  வரும் ஜனவரி மாதம் மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வர உள்ளது. அது குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதில், ஆட்சியர் கதிரவன் எம்எல்ஏக்கள் கே.எஸ். தென்னரசு, எஸ். ஈஸ்வரன். ராஜா கிருஷ்ணன். சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Top