logo
ஈரோட்டில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் திட்டக் குழும அலுவலக கட்டிடப் பணிக்கு பூமி பூஜை

ஈரோட்டில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் திட்டக் குழும அலுவலக கட்டிடப் பணிக்கு பூமி பூஜை

22/Oct/2020 10:56:18

ஈரோட்டில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் உள்ளூர் திட்ட குழும அலுவலக கட்டிட கட்டுமான பணி பூமி பூஜை நடைபெற்றது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குள்பட்ட சம்பத் நகர், உழவர்சந்தை பின்புறம் உள்ள இடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், உள்ளூர் திட்டக் குழும அலுவலகக் கட்டிட கட்டுமான பணிக்கு அரசு சார்பில் ரூ.2.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

 இதில், ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.வி. ராமலிங்கம், கிழக்கு தொகுதி எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை பூமி பூஜையுடன் தொடக்கி வைத்தனர். 

இதில், முன்னாள் துணை மேயர் பழனிச்சாமி, பகுதி செயலாளர்கள் தங்கமுத்து, கேசமூர்த்தி, ஜெகதீசன், கோவிந்தராஜன், மாணவரணி இணை செயலாளர்  யூனிவர்சல் நந்தகோபால், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்கள் வீரக்குமார், பாவை அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


Top