logo
ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது : 5 லி சாராயம், 350 லி ஊறல் பறிமுதல்.

ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது : 5 லி சாராயம், 350 லி ஊறல் பறிமுதல்.

22/Apr/2020 06:29:38

புதுக்கோட்டை மாவட்டம்,ஆலங்குடி அருகே  கள்ளச்சாராயம் காய்ச்சியவரை புதன்கிழமை (ஏப்.22)போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 லி சாராயம், 350 லி ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனர்.


கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் வடக்கு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக வட்டாட்சியர் கலைமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து, வட்டாட்சியர் அளித்த தகவலையடுத்து ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டில் குளமங்கலம் வடக்கு தொண்டைமான்குடியிருப்பைச் சேர்ந்த முத்துத்துரை மகன் வசந்த் (39) என்பவர்  கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. தொடர்ந்து,வசந்த்தை கைது செய்த போலீஸார், 5 லி சாராயம், 350 லி ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், அவரது, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Top