logo
ஈரோடு மாவட்டத்தில் இ-பதிவு இன்றி சென்ற  வாகனங்களை பறிமுதல் செய்து  811 பேர் மீது போலீசார்   வழக்கு பதிவு

ஈரோடு மாவட்டத்தில் இ-பதிவு இன்றி சென்ற வாகனங்களை பறிமுதல் செய்து 811 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

12/Jun/2021 07:55:53

ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் -பதிவு இன்றி சென்ற  வாகனங்களை பறிமுதல் செய்து  811 பேர் மீது போலீசார்   வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2 -ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வரும் ஜூன் 21 -ஆம் தேதி வரை தளர்வு உடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி சசிமோகன் தெரிவித்திருந்தார்.

19-ஆவது நாளான சனிக்கிழமை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சனிக்கிழமை முக கவசம் அணியாமல் வந்த 278 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 811 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் 766 இருசக்கரவாகனங்களும், 13 சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ரூ.5.85 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் வரும் 21-ஆம் தேதி வரை தளர்வு உடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கத்தை விட வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

சோதனைச் சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது. பெரும்பாலோனோர் மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்வதாக போலீசாரிடம் கூறினார். இந்நிலையில்  -பதிவு இன்றி ஏராளமான வாகன ஓட்டிகள் வந்திருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்து பதிவு இன்றி வந்த வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Top