logo
புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

21/Oct/2020 10:19:12

 

புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து முதல்வர் தலைமையில் நாளை ஆய்வுக்கூட்டம்: ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தகவல்

புதுக்கோட்டை:தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு (22.10.2020) நாளை வருகைதந்து மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அதிகாரப்பூர்வமாக புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியது: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் பல்வேறு வளா;ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்தும்  தமிழக முதல்வர்  ஆய்வு மேற்கொண்டு வருகிறாh;கள்.

அந்த வகையில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு  22.10.2020 நாளை வருகைதர உள்லார். காலை 10.20 மணியளவில் விராலிமலை .டி.சி நிறுவனத்தினை பார்வையிடுகிறார்அதன் பின்னர் விராலிமலை காமராஜர் நகர் பிரிவு சாலையில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையினை திறந்து வைக்க உள்ளார். மேலும் புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் குடிமராமத்து திட்டப் பணிகளை பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்  பல்வேறு துறைகளின் சார்பில்புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறுகிறது.

 

பின்னர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

 

இந்நிகழ்வுகளில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர் என. ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  தகவல் தெரிவித்துள்ளார்.

Top