logo
ஈரோட்டில் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு:மர்மநபர்கள் கைவரிசை

ஈரோட்டில் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு:மர்மநபர்கள் கைவரிசை

20/Oct/2020 10:29:12

ஈரோட்டில் கோயில் உண்டியல் உடைத்து பல ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஈரோடு நொச்சிக்காட்டு வலசு வெள்ளப்பாறை பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான முனியப்பசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் பூசாரி இன்று(அக்.20) அதிகாலை 4 மணிக்கு கோயிலின் நடையை பூஜை செய்வதற்காக திறந்து உள்ளே சென்றார். அப்போது, கோயிலில் வைக்கப்பட்டிருந்த 2 உண்டியலின் பூட்டும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பல ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

 இதுகுறித்து, கோயில் நிர்வாகிகள் ஈரோடு தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகை மற்றும் அவர்கள் விட்டு சென்ற தடயங்களை சேகரித்தனர். திருட்டு நடந்த கோயிலில் பொருத்தப்பட்டிருந்த 7 சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 


Top