06/Mar/2021 07:43:19
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அக்கட்சியினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்த தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் மதிமுக 12 தொகுதிகளைக் கேட்டு வந்ததாகக் கூறப்பட்டது. மேலும் தனி சின்னத்தில்தான் மதிமுக போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறிவந்தார்.
இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வந்தது இந்த நிலையில் 6 தொகுதி களில் அதுவும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக ஒப்புக்கொண்டதைய டுத்து, இருகட்சிகளுக் கிடையே தொகுதிப் பங்கிடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகத் தகவல் வெளியானது. இதன்பிறகு, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ இதனை உறுதிபடுத்தியுள்ளார்.