17/Oct/2020 10:31:59
ஈரோடு மாவட்டம், பூந்துறை முத்து மஹாலில் இந்து முன்னணி வழக்குரைஞர் கலந்தாய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், சென்னை உயர்நீதிமன்ற மத்திய அரசு வழக்குரைஞர் கார்த்திகேயன் மாநிலச் செயலாளர் கிஷோர் குமார் மற்றும் இந்து வழக்குரைஞர் முன்னணி மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன் வெங்கடாஜலபதி ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் முரளி நன்றி கூறினார்.