logo
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை  விரைந்து தொடங்க பிரதமருக்கு  தமிழக முதல்வர் கடிதம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்

05/Jun/2021 10:21:48

சென்னை, ஜூன்: மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டுமென  பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் புதிய எய்ம்ஸ்  மருத்துவமனையைத் தொடங்குவதற்காக  கடந்த 27-1-2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால்  அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குநர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டன.

இதற்கான நிலம் ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற் கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. விரைந்து தொடங்க வேண்டுமென்றும், இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு பணிகளைச் செயல்படுத்துவதற்கான முழு அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி   பிரதமர் மோடிக்கு  தமிழக முதல்வர்  மு.. ஸ்டாலின் (5-6-2021) கடிதம்  எழுதியுள்ளார்.

Top