15/Oct/2020 10:35:27
தமிழக முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலர், பொன்னமராவதி ஒன்றிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
முதல்வர் எடப்பாடி கே, பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவருமான பி.கே.வைரமுத்து,அவரது புதல்வர் தொழிலதிபர் பி.கே.வி.குமாரசாமி, பொன்னமராவதி ஒன்றிய செயலாளர் பழனியாண்டி, இணைச்செயலாளர் மோகனாசேகர், வர்த்தக பிரிவு தலைவர் அரசமலை முருகேசன்.
மாணவரணி ஒன்றிய செயலாளர் ஆலவயல் சரவணன், சிறுபான்மையினர் பிரிவு நிசார் அலி,எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய தலைவர் சுப்பிரமணியன்,கொன்னையூர் செல்வம் இளைஞர்,இளம்பெண்பாசறை இணைச்செயலாளர் தேனு, மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பொன்னமராவதி நிர்வாகிகள் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியயை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.