logo
ஈரோடு மாவட்ட வேளாண்குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை- விவசாயிகள் வேதனை

ஈரோடு மாவட்ட வேளாண்குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்படவில்லை- விவசாயிகள் வேதனை

15/Oct/2020 10:26:51

ஈரோடு:  தமிழகத்திலுள்ள அனைத்து அமைப்புகளும், அரசு நிகழ்வுகளும், நீதி மன்றங்களும் காணொலி வழியாக இயங்கி வருகிறது.   பக்கத்து மாவட்டமான திருப்பூர் மாவட்டத்தில் இன்று வேளாண்குறை தீர்க்கும் கூட்டம் காணொலி வழியாக நல்ல முறையில் நடந்துள்ளது.  

 இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவரும் ஈரோடு மாவட்ட வேளாண்குறை தீர்க்கும் கூட்டத்தை மற்ற மாவட்டங்களைப் போல நடத்த வேண்டுமென தற்சார்பு விவசாயிகள் சங்க நிர்வாகி கி.வே.பொன்னையன், தமிழ் நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி ஏ.எம்.முனுசாமி தமிழக விவசாயிகள் சங்கம் (கே.சி) சுப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ)சி.எம்.துளசிமணி ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.


Top