logo
ஈரோடு மாவட்டத்தில்  38 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா

20/Dec/2020 10:54:52

ஈரோடு, டிச: ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 38பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,316 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 53பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்காரணமாக கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 12,890பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 284பேருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 142 பேர் பலியாகி உள்ளனர்.

Top