logo
மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்றதாக 280 வழக்குகள் பதிவு

மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்றதாக 280 வழக்குகள் பதிவு

15/Nov/2020 08:37:20

ஈரோடு: மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்றதாக 280 வழககுகள் பதிவு செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப் பட்டது. டாஸ்மாக் அனுமதியின்றி மது விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதேபோன்று மதுவிலக்கு போலீஸாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் அனுமதி இன்றி மது விற்பனை செய்ததாக 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  இதேபோல் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா விற்பனை தொடர்பாக மாவட்டம் முழுவதும் கடைகளில் அதிரடி போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டம் முழுவதும் 150 கடைகளில் புகையிலை குட்கா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்றது தெரியவந்தது இதையடுத்து அந்த பொருட்கள் பறிமுதல் செய்ததுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.


Top