logo
6 ஆண்டுகளுக்குப்பின் பழனி முருகன் கோயிலுக்கு நாட்டுச்சர்க்கரை கொள்முதல்: அமைச்சர் கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்

6 ஆண்டுகளுக்குப்பின் பழனி முருகன் கோயிலுக்கு நாட்டுச்சர்க்கரை கொள்முதல்: அமைச்சர் கருப்பண்ணன் தொடங்கி வைத்தார்

15/Oct/2020 02:52:03

ஈரோடு: பழனி முருகன் கோவிலுக்கு தேவையான நாட்டு சர்க்கரை  தேவஸ்தானம் சார்பில்  25  ஆண்டுகளாக கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள  கவுந்தம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

 கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறித்து இப்பகுதி  கரும்பு விவசாயிகள் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர். இதையடுத்து, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்  நாட்டு சக்கரை கொள்முதலை இன்று மீண்டும் தொடங்கி வைத்தார்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இருந்த விவசாயிகளிடம் பழநி முருகன் கோயில் தேவஸ்தானம் பஞ்சாமிர்தம் தயாரிக்க மூலப்பொருளாக உள்ள நாட்டு சர்க்கரையை கடந்த 25 ஆண்டுகளுகாக கொள்முதல் செய்து வந்தது. கடந்த  6 வருடங்களாக இடையில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பழநி தேவஸ்தானம் நாட்டு சர்க்கரையை கொள்முதல் செய்வதை நிறுத்தியது.

இதனால் கரும்பு விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வந்தனர். பழனி தேவஸ்தானம் மீண்டும் கொள்முதல் செய்ய நாட்டு சர்க்கரை உற்பத்தி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் முதல்வரிடம் கலந்து ஆலோசித்தை தொடர்ந்து மீண்டும் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்ய தமிழக அரசுஉத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கவுந்தபாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 6 வருடங்களுக்கு பிறகு பழநி தேவஸ்தானம் பஞ்சாமிர்தம் தயாரிக்க நாட்டு சர்க்கரையை கொள்முதல் செய்யும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் மற்றும் மாவட்ட  ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தனர்.

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நாட்டு சர்க்கரையை 60 கிலோ மூட்டைக்கு ரூ.2,490  விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டு சர்க்கரையை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாட்டு சர்க்கரையின் தரம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து பழநி தேவஸ்தான அதிகாரிகள் விவசாயிகளிடம் விளக்கமளித்தனர். இதில் பழநி தேவஸ்தான செயல் அலுவலர் நடராஜ், பஞ்சாமிர்த தயாரிப்பு கண்காணிப்பாளர் மனோகரன் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர்  பங்கேற்றனர்.

Top