logo
அறந்தாங்கி அருகே காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

அறந்தாங்கி அருகே காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

14/Oct/2020 05:54:05

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில்  காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராமன், துணை தலைவர் ஆனிவிஜயா, புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு அறந்தாங்கி டிஎஸ்பி ஜெயசீலன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் சப் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகி்த்தனர்.

நிகழ்ச்சியில் கொரோனாவில் இருந்து  பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது, நோய் வந்தால் எப்படிப்பட்ட மருத்துவ முறைகள் மூலம் எதிர் கொள்ளவது, சமுக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் நடமாடுவது போன்ற விஷயங்கள் விளக்கிக்கூறப்பட்டன.

இதையொட்டி பொதுமக்களை  சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .அதனை தொடர்ந்து உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அறந்தாங்கி காவல்துறையினர் செய்தனர். 


Top