logo
நடிகை குஷ்பு அரசியலில் சாதாரண நபர் அல்ல- பொன்.ராதாகிருஷ்ணன்

நடிகை குஷ்பு அரசியலில் சாதாரண நபர் அல்ல- பொன்.ராதாகிருஷ்ணன்

14/Oct/2020 04:13:24

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, நடிகை குஷ்பு அரசியலில் சாதாரண நபர் அல்ல எனத்தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த நடிகை குஷ்புவை பாஜகவில் இணைந்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், குஷ்பூ அரசியலில் சாதாரண ஒரு ஆட்களை போல் இல்லாமல் ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர். 2013-14 களிலேயே பாஜக வில் இணைய வேண்டியவர். மோடி அவர்களை விமர்சனம் செய்தது அழுத்தத்தினால்தான் என்று அவரே கூறியுள்ளார் என்றார்.

மேலும் அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் சூரப்பா குறித்த கேள்விக்கு, பல்கலைக்கழகத்தை மேம்படுத்த துணைவேந்தர்கள் இது போன்று செய்வது கடமை. அவர் செய்ததில் தவறில்லை என்றும் கூறினார்.

பிரசாந்த் கிஷோரை தேர்தல் உத்திகளுக்காக வைத்திருக்கும் திமுகவின் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு, பிரசாந்த் கிஷோர் திறமையானவர். வழிகாட்டும் போது யாருக்கு வழிகாட்டுகிறார் என்பது முக்கியம். வாகனம் ஓட்டும் போது எந்த வாகனத்தை ஓட்டுகிறார் என்பது முக்கியம் என்றும் அவர் நான்கு சக்கரமும், பிரேக்கும் இல்லாத வாகனத்தை ஓட்ட முயற்சி செய்கிறார் என்றார் பொன். ராதாகிருஷணன்..

    

Top