logo
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு பேரவையில் முதல்வர் அறிவிப்பு:

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு பேரவையில் முதல்வர் அறிவிப்பு:

21/Mar/2020 03:51:27

தமிழகத்தில் 10ஆம் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்

கொரோனா பாதிப்பு எதிரொலியாக, தற்போது 9ஆம் வகுப்பு வரை அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, 10ஆம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 27ல் தொடங்க இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுருத்தல் காரணமாக தேர்வானது ஏப்ரல்-14க்கு பின் தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கான புதிய அட்டவனை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்

Top