logo
மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ நம்பிக்கை

மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் - அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ நம்பிக்கை

11/Oct/2020 12:26:36

மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் நிலைதான் தமிழகத்தில் நிலவி வருகிறது தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் தூத்துக்குடியில் கூறியுள்ளார். 

வருகிற 13-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொரானா பாதிப்புகள் மற்றும் கொரானா சமயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளார்.

அவரது நிகழ்ச்சி நிரல் குறித்தும் அவரது நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தில் செய்யப்படவேண்டிய ஆயத்தப்பணிகள் குறித்தும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  விழா நடைபெறக்கூடிய இடங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்துகிறார் பின்னர் நலத்திட்ட உதவிகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்குகிறார் என்று கூறிய அவர் கொரானா தடுப்பு பணிகள் குறித்து அரசு எடுத்துக்கொண்ட சிரமங்கள், பணிகள் குறித்து தயாரிக்கப்பட்டுள்ள வீடியோ சிடீயை எடப்பாடி கே. பழனிச்சாமி  தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள விழாவின்போது வெளியிட உள்ளதாகவும் இது தமிழக தலைமைச் செயலகத்தில் வைத்து நடைபெற வேண்டிய விழா. அதனை நமது தூத்துக்குடியில் வைத்து நடத்துவது பெருமைக்குரியது என்றும், சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிந்த பணிகளை துவக்கி வைத்தல், நடைபெற வேண்டிய புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டுதல் இந்த விழாவில் நடைபெற உள்ளதாகவும் கூறினார். 

மேலும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் திமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு ஒருவர் போனால் 100 பேர் வருகின்ற இயக்கம் அதிமுக அதே விளத்திக்குளம் தொகுதியில் திமுகவை சேர்ந்த என்.கே. பெருமாள் உள்பட பலர் அதிமுகவுக்கு வந்துள்ளனர் நீங்கள் சொன்ன நபர் கட்சியில் இல்லை கட்சியில் இருந்து கடந்த கடந்த 2019 -இல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலின் போது அதிமுகவுக்கு எதிராக தனித்துப் போட்டியிட்டதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

நீக்கப்பட்டவர் எங்கு போனாலும் எங்களுக்கு கவலையில்லை நிறைய பேர் அதிமுகவில் தான் இணைந்து வருகின்றனர். மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக தான் ஆட்சிக்கு வரும் நிலை தான் தமிழகத்தில்  சூழ்நிலை நிலவி வருகிறது எனவும் கூறி சென்றார். அவருடன் அதிமுக மாவட்டச் செயலாளரும்  திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான சண்முகநாதன் உட்பட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.


Top