logo
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

11/May/2021 06:50:32

சென்னை, மே: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட  7 பேர்  விடுதலை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட  7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்  இப்பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தலைமை வழக்குரைஞர் சண்முகசுந்தரம், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஆகியோருடன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.  7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

 முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் எழுவர் விடுதலை தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Top