10/Oct/2020 07:14:55
ஈரோடு: ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.
நேற்று நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 100.39 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2013 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தொடர்ந்து 850 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. இன்று முதல் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்கு 400 கன அடியாக தண்ணீர் குறைத்து விடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கீழ்பவானி பாசனத்திற்காக 2300 கன அடி நிதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து காட்டிலும் திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.