logo
விடியலை நோக்கி... ஈரோடு மாவட்டத்தில்   திமுக எம்பி. கனிமொழி   பிரசாரம்

விடியலை நோக்கி... ஈரோடு மாவட்டத்தில் திமுக எம்பி. கனிமொழி பிரசாரம்

30/Nov/2020 10:50:28

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே,உள்ள,கவுந்தப்பாடி பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற  தலைப்பில் திமுகஎம்.பியும்  மாநிலமகளிர் அணிசெயலாளருமான கனிமொழி சுற்றுப்பயணம்  மேற்கொண்டார்.விடியலைநோக்கி ஸ்டாலின் குரல்என்ற தலைப்பில் திமுகஎம்.பியும் திமுகமாநிலமகளிர் அணிசெயலாளருமானகனிமொழி தமிழகம் முழுவதும்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். 

அதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் நவ.30 முதல் 3 நாள்களுக்கு  மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்திக்கவுள்ளார். முதல்நாளான திங்கள்கிழமை ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளக வுந்தப்பாடி நால்ரோட்டில் பிரசாரப் பயணத்தை தொடங்கிய கனிமொழிக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். 

அதில் தொண்டர் ஒருவர் எம்.பி.கனிமொழிக்கு வாள் வழங்கிய பின்னர் வெற்றிவேல் வீரவேல் என முழக்கம் எழுப்பினர். இன்னும்அதிமுகஆட்சி 5 அம்மாவாசைக்குதான் இருக்கும் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். பேச அனுமதியில்லாததால் தொண்டர்கள் ஏமாற்றம்அடைந்தனர். அதனைதொடர்ந்து பிரசாரப்பயணம் மேற்கொண்ட கனிமொழிசாலையில் நடந்தபடி பொதுமக்களிடம் நலம் விசாரித்தார் .அனைவரும் முகக்கவசம் அணியும் படிஅறிவுரை வழங்கினார்.

மேலும் பி.மேட்டுப்பாளையம் பகுதியில் கடைநடத்திவரும் பெண்மணிமற்றும் கார்மெண்ட்ஸ் நடத்திவரும் பெண்களையும் நைட்டி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபெண்களையும் சந்தித்து நலம் விசாரித்து விடிலை நோக்கி பயணத்தின் நோக்கம் குறித்த கையேடுகளை வழங்கினார். மேலும் அவர்களது தொழில் வருமானம் ஆகியற்வற்றை கேட்டறிந்துஅவர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். கனிமொழியை சந்தித்துப் பேசிய பெண்கள் மகிழ்சியடைந்தனர்.

Top