logo
ராகுல் காந்தி- சோனியா காந்தி மீது தாக்குதல்: காங்கிரஸார் போராட்டம்

ராகுல் காந்தி- சோனியா காந்தி மீது தாக்குதல்: காங்கிரஸார் போராட்டம்

07/Oct/2020 11:33:56

ஈரோடு: காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரபிரதேச போலீஸாரா தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஈரோடு மூலப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரபிரதேச போலீஸாரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அந்த மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில்  ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.

போராட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியம் தங்கவேல், வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், ராவுத்குமார், ஆண்டமுத்துசாமி, சர்வேஸ்வரன், பழனிச்சாமி, சண்முகம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


                                                                               


Top