logo
வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஈரோட்டில் பீடி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஈரோட்டில் பீடி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

19/Feb/2021 06:16:40

ஈரோடு, பிப்: வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில்  பீடி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள்: புகையிலை விற்பனை முறைப்படுத்தும் சட்டத்தை அமலாக்குவதற்கு முன்பாக பீடி உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேச வேண்டும்.வேலைவாய்ப்பு இழந்துள்ள பீடி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாற்று வேலையை உருவாக்கவேண்டும். வேலை இழப்புகு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

 பீடித் தொழிலாளர்களின் சேம நல திட்டங்கள்  உத்தரவாதப்படுத்த வேண்டும் ஜிஎஸ்டி வருவாயிலிருந்து போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து சேமநல திட்டங்களான கல்வி மருத்துவம் திருமணம் உள்ளிட்ட  அனைத்து நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். அனைத்துப் பீடி தொழிலாளர்களையும் பிஎப் திட்டத்தில் இணைத்து அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் பீடி  தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும் உள்பட  பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம்  அருகே ஈரோடு மாவட்ட பீடி சுருட்டு தொழிலாளர்கள் கண்டன   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு பீடி தொழிலாளர் சங்க தலைவர் கைபானி  தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். இதில் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.

Top