logo
நாகையில் ஒரு லட்சம் பனை விதைப்பு திட்டம் தொடக்கம்

நாகையில் ஒரு லட்சம் பனை விதைப்பு திட்டம் தொடக்கம்

06/Oct/2020 12:25:21

நாகை மாவட்டத்தில் சீர்காழி நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளையுடன் இணைந்து 1 லட்சம் பனை விதைக்கும் இலக்காகக் கொண்ட திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் இன்று(அக்.5) தொடக்கி வைத்தார். 

மண் காக்க மாபெரும் பணியாய் ஒன்றாய் இணைந்து கரம் கோர்த்து பனை நடுவோம் வாருங்கள் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றங்களைத் தாங்கி நிற்கக்கூடியது பனைமரம் மட்டுமே என்பதால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பனை விதைகள் விதைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒருகட்டமாகச் சீர்காழி சுற்று வட்டப் பகுதிகளில் இப்போது பனை விதைக்க முன் வருவோம் என்று மக்களிடம் பனை விதைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொது இடங்கள், வயல் வரப்புகளில் பனை போட்டுத் தருவதாக கிராமங்கள், நகரங்கள்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

அதன் தொடக்கமாக, சீர்காழி வட்டம், நிம்மேலி கிராமத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாகை ஆட்சியர் பிரவீன் பி. நாயர்  1 லட்சம் பனை விதைப்பு திட்டத்தை தொடக்கி வைத்தார்.இதில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை, ரோட்டரி சங்கம், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், லயன்ஸ் சங்கம், நிம்மேலி, மரு தங்குடி, புங்கனூர் உள்ளிட்ட ஊராட்சி மன்றங்கள், சீர்காழி நகராட்சி, ஊராட்சி ஒன்றியம், வைத்திஸ்வரன் கோயில் பேரூராட்சி  நிர்வாகத்தைச்  சேர்ந்தவர்கள் பங்கேற்றுத் தொடர்ந்து பனை விதை நடவுள்ளனர் 

Top