logo
புள்ளாச்சிகுடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளி மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு

புள்ளாச்சிகுடியிருப்பு அரசு தொடக்கப்பள்ளி மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ஆய்வு

30/Jun/2022 07:55:43

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுடியருப்பு அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

 வடகாடு ஊராட்சி புள்ளாச்சிகுசியிருப்பு அரசு தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேலும், பள்ளியை மேம்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் அரசின் பங்களிப்போடு குளிர்சாதன வசதி, ஸ்மார்ட் வகுப்பறை, கலையரங்கம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளியில் நடைபெற்றுவரும் பணிகளை சுற்றுச்சூழல், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் தரைத்தளம் அமைத்துத்தருவதாக உறுதியளித்தார். உறுதியளித்த அமைச்சரை பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்

ஆய்வின்போது, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.சுரேஷ், பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top