logo
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் முதல் 3 நாட்களுக்கு பொது மக்கள் வழிபட தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் முதல் 3 நாட்களுக்கு பொது மக்கள் வழிபட தடை

04/Sep/2021 10:01:03

ஈரோடு, செப்: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி ஆடி மாதம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகளவு கோயில்களில் கூட்டம் கூடுவதன் காரணத்தால் இந்த மூன்று நாட்களுக்கு மட்டும் மக்கள் கோவில்களில் சென்று வழிபட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் மக்கள் கோவில்களில் வெளியிலேயே நின்று சாமி கும்பிட்டு சென்றனர்.

இந்நிலையில், ஆடி மாதம் முடிந்தும் மீண்டும் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்று நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பொதுமக்கள் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், கோபி கொண்டத்துக்காளியம்மன் கோவில், ஈரோடு மாநகரில் புகழ்பெற்ற ஈஸ்வரன் கோவில்கள் , பெரிய மாரியம்மன் கோவில் நடைகள் சாத்தப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் சாமி கும்பிட வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஒரு சில மக்கள் கோவில் வெளியே நின்று சாமி கும்பிட்டு விளக்கேற்றி வழிபட்டு சென்றனர்.

Top