02/Sep/2021 12:26:42
ஈரோடு, செப்: ஈரோடு மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட திரளான அதிமுகவினர் மனுத்தாக்கல் செய்தனர்.
ஈரோடு மண்டல அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு நிர்வாகிகளுக்கான அமைப்பு தேர்தல் வருகிற 7 -ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தேர்தலுக்காண வேட்பு மனு தாக்கல் இன்று ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக கழக அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் ஈரோடு மண்டலத்திற்கு உட்பட ஈரோடு, கோபி,பள்ளிபாலையம்,பவானி,அந்தியூர், சத்தியமங்கலம், பெருந்துறை, கவுந்தபாடி, கொடுமுடி, கரூர் உள்ளிட்ட 14 கிளைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இதனை, மண்டல தேர்தல் ஆணையாளரும் அதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவையின் பொருளாளர் அப்துல் அமீது, அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேர்தல் பொருப்பாளருமான செல்வகுமார சின்னையன், தேர்தல் பொறுப்பாளர்கள் ஜான் ,தெய்வநாயகம் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் வேட்புமனு பெற்றுக்கொண்டு தொடங்கி வைத்தனர்.
வருகிற 3-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் மண்டல செயலாளர் ,தலைவர்,பொருளாளர்,துணைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் வேட்புமனு நடைபெறுவதால் அதிமுக அலுவலகத்தில் ஏராளமானோர் ஆர்வத்துடன் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.