logo
புதுக்கோட்டை வேதாத்திரி மகரிஷிமனவளக்கலை மன்றம்  சார்பில் மனைவியர் தினம்

புதுக்கோட்டை வேதாத்திரி மகரிஷிமனவளக்கலை மன்றம் சார்பில் மனைவியர் தினம்

31/Aug/2021 11:34:02

புதுக்கோட்டை, ஆக:   உலக சமுதாய சேவா சங்கத்தின் நிறுவனர் வேதாத்திரி மகரிஷியின் மனைவி லோகாம்பாள் பிறந்த நாள் மனைவியர் தினமாக கொண்டாடப்படுகிறது .

திருச்சி மண்டல உலக சமுதாய சேவா சங்கம் சார்பில்   நடத்தப்பட்ட  மனைவியர் வேள்வி நாளில்,  மண்டல தலைவர் அருள்நிதி மாலாஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.                             இதில்,  புதுக்கோட்டை    பேலஸ் சிட்டி ரோட்டரிசங்க தலைவர் இரா. துரைமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு     பேசுகையில்,  இந்த உலகம் முழுவதும் தன்னுடைய குடும்பத்திற்காக  மனைவியர்கள்   இரவு பகலாக உழைக்கிறார்கள். அதேபோல்  கணவர்களும் இரவு பகலாக குடும்பத்திற்காக உழைக்கிறார்கள்.

குடும்பம் என்றால் என்ன குடும்பம்  தன்  மனைவி   பிள்ளைகளுக்கானது. ஆனால் ஒரு பொழுதும் நாம் மனைவியை பாராட்டுவதும் இல்லை. அவருடைய அவரைப் பற்றி நம் சிந்திப்பதும் இல்லை. நம் உயிர் இருக்கும் வரை உறவோடு வரும் ஒருவர் யார்என்றால் அவர் மனைவி மட்டுமே.  அந்த மனைவி ருக்காக நாம் விழா எடுப்பது தவறு இல்லை. மனைவியர் தினத்தை முன்னிட்டு மனைவிமார்களை வாழ்த்துவோம். பாதுகாப்பாக வைத்துக் கொள்வோம் என்று கூறினார் .

கௌரவ விருந்தினராக வெள்ளாறு மனவளக்கலை மன்ற தலைவர் மு.க செல்லப்பன் யோகா பயிற்சியை துவக்கி வைத்து வாழ்த்தினார்.  செல்விதுரைமணி,    மண்டல செயலாளர் காளிதாசன், பெல் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை தலைவர் அருள்நிதி பாலசுப்பிரமணியம்,  பேராசிரியர் அமுதா ராமானுஜம், வெள்ளாறு மனவளக்கலை மன்ற தலைவர் மு.க செல்லப்பன், ரேகாசெல்லப்பன், செயலாளர் அருள்நிதி உத்தமன் ,லதா உத்தமன்   உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்  உலக சமுதாய சேவா சங்க கூடுதல் இயக்குனர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்  


Top