20/Nov/2020 05:43:04
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு பாஜக மாநில தலைவர் எல். முருகன் அளித்த பேட்டி:
தமிழகத்தில் அடுத்து வரும் ஆட்சியை பாஜகதான் தீர்மானிக்கும். நம் பண்பாட்டை, மரபுகளை இழிவுபடுத்துவோருக்கு தக்க பாடத்தை புகட்டு வகையில் நடைபெறும் இந்த யாத்திரைக்கு எத்தனை தடை வந்தாலும் யாத்திரை தொடரும்.
வெற்றிவேல் யாத்திரை கடந்த நவம்பர் 6 -ஆம் தேதியிலிருந்து திருத்தணியில் தொடங்கி இன்று. கந்தசஷ்டிகவசம் பாடிய இடம், பாலதேவராயர் பாடிய இடத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஈரோட்டில் யாத்திரையை தொடங்குகிறோம். எங்களுடைய நோக்கம் இந்து கடவுள்களை அவமதிக்கும் திமுக, கருப்பர் கூட்டம் கயவர் கூட்டம் தக்க பாடத்தை புகட்டுவதற்காக இந்த யாத்திரையை தொடங்கி இருக்கிறோம். கொரனோ களப்பணியாளர்களை கௌரவபடுத்துவதற்காகவும் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதும் எங்கள் திட்டம்.
அமித்ஷா வருகை கட்சியின் தொண்டர்களுக்கு ஆக்கத்தையும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்கும், அவரின் வருகை கட்சியினர்க்கு ஊக்கத்தை கொடுக்கும். நம் பண்பாட்டை, மரபுகளை இழிவுபடுத்துவோருக்கு தக்க பாடத்தை புகட்டுவோம். தமிழகம் ஆன்மிக பூமி, தெய்வீக பூமி என்பதை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்படும் இந் யாத்திரை எத்தனை தடை வந்தாலும் டிசம்பர் 7-ஆம் தேதி திருச்செந்தூர் வரை சென்று சேரும் என்றார்.