28/Aug/2021 11:11:50
ஈரோடு, ஆக: ஈரோடு வ.உ.சி பூங்காவில் இன்று வலிமையான இந்தியாவிற்கான சுந்தந்திர ஓட்டம் என்ற பெயரில் மராத்தான் ஓட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து, மராத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ் வரவேற்றார்.
மாரத்தான் ஓட்டம் வ.உ.சி. பூங்காவை தொடங்கி ஸ்வஸ்திக்கார்னர், சத்தி ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக மீண்டும் வ.உ.சி. பூங்காவில் நிறைவடைந்தது. மாரத்தான் ஓட்டத்தில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.