logo
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

25/Aug/2021 07:05:48

ஈரோடு ஆக: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை நடமாட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறுத்தை புலி ஒன்று நடமாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சத்தியமங்கலம் மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், ஆசனூர் வனப்பகுதியில், நெடுஞ்சாலையை ஒட்டி சிறுத்தைப்புலி ஒன்று நடமாடியதை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரில் வந்த பயணி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தை நடமாட்டத்தை படம் பிடித்துள்ளார். ஆசனூர் பகுதியில் யானை மற்றும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து, அடிக்கடி சாலையை கடந்து செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Top