logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் 1.17  லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் 1.17 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

26/Apr/2021 06:00:34

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் 1.17  லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் முதலில் தனியார், அரசு  மருத்துவமனைகளில்  பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் போலீசார் பிற துறையில் பணியாற்றும்ஊழியர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 80 வயது மேற்பட்ட முதியவர்கள், மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்டம் முழுவதும் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 அதிலும் குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனியார்  மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகள் போட்டு வருகிறார்கள். அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதற்கு ஏற்ப தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் ஒரு வாரத்திற்கு 4000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4000 பேருக்கு வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் 1 லட்சத்து 17ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஒருவர் முதல் தடவை கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அடுத்ததாக 28 -ஆவது நாளில் இரண்டாவது அதே கோவேக்சின் தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

                                                  

        

Top