logo
ஈரோடு காரை வாய்க்கால் நாகர்கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் விழா

ஈரோடு காரை வாய்க்கால் நாகர்கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் மாற்றும் விழா

24/Aug/2021 09:06:37

ஈரோடு, ஆக: ஈரோடு காரை வாய்க்காலில் பிரசித்தி பெற்ற சுயம்பு நாகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நாளில் பக்தர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்வது வழக்கம்.

இந்தநிலையில், ஆவணி அவிட்டம் விழா காரை வாய்க்கால் சுயம்பு நாகர்கோவிலில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர். இதையொட்டி நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், ஈரோடு சவுராஷ்டிரா சபை சார்பில் பூணூல் மாற்றி கொள்ளும் விழா சுயம்பு நாகர்கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சபை தலைவர் சந்திரசேகர் தலைமை  வகித்தார். செயலாளர் குருபரன், பொருளாளர் சீனிவாசன், உதவி தலைவர் ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சேலம் ஸ்ரீமான் ஸ்ரீநிவாச அய்யங்கார் கலந்துகொண்டு வழிபாடு செய்து விழாவை நடத்தி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் பூணூல் மாற்றி கொண்டனர். இதைத்தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


Top