logo
 புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 27.08.2021 வரை நடைபெறுகிறது:ஆட்சியர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 27.08.2021 வரை நடைபெறுகிறது:ஆட்சியர் தகவல்

21/Aug/2021 11:22:32

புதுக்கோட்டை, ஆக:புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 27.08.2021 வரை நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர்  கவிதாராமு வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்  (TIIC)  மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும்.  1949-ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்க தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக நிகழ்கிறது.

இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கு, உற்பத்தியை பன்முகப்பத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின்கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

தஞ்சாவூர் கிளை அலுவலகம் (முகவரி: 2854 1, N.G.K.. அப்பார்ட்மெண்ட், அருள் தியேட்டர் எதிரில் நாஞ்சிக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்), புதுக்கோட்டை கள அலுவலகம் (முகவரி: 3743/3 A,  மேல ராஜ வீதி, புதுக்கோட்டை - 622001) -களில் குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 18.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுகிறது.

இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி - யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், 6% வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் ( NEEDS ) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 % முதலீட்டு மானியம் ரூ.50 இலட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.


Top