11/Jun/2021 05:55:28
ஈரோடு, ஜூன்: முதல்வர் அறிவித்த 14 வகையான மளிகைப் பொருட்கள், 2-ஆவது தவணை ரூ.2,000 நிவாரணத் தொகை வழங்குவதற்காக ஈரோட்டில் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.வரும்15-ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தி.மு.க தேர்தல் அறிக்கையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4
ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
4 ஆயிரம் நிவாரணத் தொகையில் 2 கட்டமாக வழங்க
முடிவு செய்யப்பட்டு அதன்படி கடந்த மாதம் முதல் கட்டமாக ரூ.2
ஆயிரம் நிவாரண தொகை அனைத்து ரேஷன்
கடைகள் மூலம் சமூக இடைவெளி கடைப்பிடித்து
வழங்கப்பட்டது.
இந்த பணியை முதலமைச்சர் மு.
க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்துக்கும்
மேற்பட்ட அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண தொகையான ரூ.2 ஆயிரத்தை ரேஷன்
கடையில் சென்று பெற்றுக் கொண்டனர்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் கொரோனா 2-ஆவது தவணை நிவாரண தொகையான ரூ.2000 மற்றும் உப்பு கோதுமை மாவு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு உள்பட 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து ரேஷன் கடை பணியாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகத்தை தொடங்கி உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலும் வீடு வீடாகச் சென்று
ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன்களை வழங்கி வருகின்றனர். வரும் 14-ஆம் தேதி வரை இந்த பணி நடைபெற உள்ளது. அதைத்
தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1152 ரேஷன்
கடைகளுக்கு வரும் 15-ஆம் தேதி முதல் கொரோனா இரண்டாம் கட்ட
நிவாரண தொகை, 14 வகையான மளிகைப் பொருட்கள்
அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது.
சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நாளொன்றுக்கு 200 பேர் வந்து பொருட்கள் வாங்கும் வகையில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அந்த டோக்கனை பொருட்கள் வினியோகிக்கப்படும் மக்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த நாட்களில் வந்தால் போதும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கொரோனா காரணமாக வெளியில் தனிமையில் இருப்பவர்கள் தனிமை காலம் முடிந்து ரேஷன் கடைகளில் நிவாரண தொகை , மளிகை பொருட்களை வாங்கி செல்லலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.