logo
தொடர்ந்து டீசல் விலை கடும் உயர்வு:ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் தொடர் வேலைநிறுத்தம்

தொடர்ந்து டீசல் விலை கடும் உயர்வு:ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் தொடர் வேலைநிறுத்தம்

17/Aug/2021 06:25:17

ஈரோடு, ஆக:  டீசல் விலை உயர்வால் தொழிலை நடத்த முடியாத நிலையில்  ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் போர்வெல் வாகனங்கள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு..

தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கோபி , திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர், நாமகைல் மாவட்டத்தில் திருச்செங்கொடு ஆகிய பகுதியில் தான் ஆழ்குழாய் கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுத்தபடும் போர்வெல் வாகனங்கள் அதிகளவில் உள்ளது. இந்த பகுதியில் இருந்தே நாடு முழுவதும் பல்வேறு மாநிங்களில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக போர்வெல் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக டீசல் விலை தொடர்ந்து நாள்தோறும் கடுமையாக உயர்ந்து வருகிறது.ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை எட்டி உள்ள நிலையில் போர்வெல் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, கோபி அருகே உள்ள கரட்டடி பாளையத்தில் கோபி, சத்தியமங்கலம், நம்பியூர் ஆகிய பகுதிகளில் உள்ள போர்வெல் வாகனங்கள் கொண்டு வரப்பட்டு  ஒரே இடத்தில் நிறுத்தி வைத்த உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 80 முதல் 100 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது 500 அடி ஆழத்திற்கு போர் போட வேண்டும் என்றால் சராசரியாக 500 முதல் 600 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது.இது தவிர ஒரு போர்வெல் வாகனத்திற்கு சராசரியாக 5 முதல் 7 ஆட்கள் வரை தேவைப்படுகிறது.

கூலி ஆட்களுக்கு சம்பளம், டீசல் என நாள்தோறும் பல ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.இதே  நிலைமை நீடித்தால் தொழிலையே நடத்த முடியாத நிலை ஏற்படும்.அதனால் கட்டண உயர்வை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வரை போரட்டம் நடைபெறும் என்றார்.

போர்வெல் வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

Top