logo
சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் சார்பில் திருமயம், ஆலங்குடி  தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு  நியமனம்

சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் சார்பில் திருமயம், ஆலங்குடி தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு நியமனம்

21/Mar/2021 02:10:34

புதுக்கோட்டை, மார்ச்: சட்டப்பேரவைத்தேர்தல் ஏப்ரல்-6-இல் நடைபெறவுள்ளதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும்  தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருமயம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிகளுக்கான  தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம.சுப்புராம் வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் பரித்துரையின் பேரில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் ப சிதம்பரம்  ஒப்புதலோடு திருமயம் சட்டமன்ற தொகுதிக்கும் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கும்  பின்வரும்  நிர்வாகிகள்  தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

ஆலங்குடி தொகுதி:  எஸ். மகாதேவன்,  மா. தமிழ்செல்வன், ஜெயபால், துரைகண்ணன், ஓ.எஸ்.எம். சாகுல் ஹமீது,த.தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திருமயம் தொகுதி: எம்.கே. முகமது இப்ராஹிம், எஸ். பி. ராஜேந்திரன், கே. ஆர். பிச்சைக்குட்டி ,கே. ஆர். மாணிக்கவேல் , பெருமாள், கதிரவன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இந்த  பணிக்குழு உறுப்பினர்கள்  அந்தந்த வட்டார நகரத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் ராம. சுப்புராம் தெரிவித்துள்ளார்.



Top