logo
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் 2-ஆவது நாளாக முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் அடைப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் 2-ஆவது நாளாக முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் அடைப்பு

17/Aug/2021 05:37:51

ஈரோடு, ஆக: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் 2-ஆவது நாளாக முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்  இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது. 

 மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர். கே. வி .ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.ஊ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும், பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபியில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்தியமங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு மாநகர் பொருத்தவரை ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்கேவி ரோடு பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இதனால் இந்தப் பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இது போக ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், அழகு சாதன கடைகள் போன்ற கடைகள் இருப்பதால் இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

 இந்த பகுதியில் அனைத்துக்கடைகளும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.  இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமேதிறக்கப்பட்டு இருந்தது. நேற்று தடை விதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் பூட்டப்பட்டு இருந்தன.

 மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா என்பதை கண்காணித்தனர். ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 11 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதுபோல் கோபி, சத்தியமங்கலம், பவானி, புளியம்பட்டி, தாளவாடி என மொத்தம் 24 இடங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

 இதனால் இந்த பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்றும் குறிப்பிட்ட பகுதிகளில் அத்தியாவசிய தடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.இந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப் படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றும் முக்கியமான வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

Top