logo
நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி : எம்பி சுப்பராயன்

நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி : எம்பி சுப்பராயன்

07/Aug/2021 07:06:06

ஈரோடு, ஆக:  ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியுசியின் தமிழ்நாடு உள்ளாட்சிதுறை பணியாளர் சம்மேளத்தின் கூட்டம் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், எம்பி- கே.சுப்பராயன் மேலும் கூறியதாவது:

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களின் கருத்துகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்கள். மோடி அரசு மடியில் கணம் இருப்பதால் வழியில் பயப்படுகிறார். மத்திய அமைச்சரவை மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக நடப்பதால் ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது. உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்.

முரட்டு பிடிவாதத்தால் தான் நாடாளுமன்றத்தை முடிக்கி உள்ளதாகவும் ,  நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடிதான். முறைகேடுகளை செய்வதற்காகவே திட்டங்கள் திட்டிய அரசு அதிமுக அரசு. பவானி ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை தமிழக அரசு நிறுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.உள்ளாட்சிகளில்  பணிகளை தனியாருக்கு தமிழக அரசு கொடுக்கக்கூடாது என்றார் எம்பி.சுப்பராயன்.

Top