logo
புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

04/Oct/2020 08:10:49

புதுக்கோட்டையில் முக்கிய வீதியான கீழ ராஜ வீதியில் நேற்று இரவு நடந்து சென்ற பெண்ணிடம் 16 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டையின் பிரதான கடைவீதியாக திகழ்வது கீழ ராஜவீதிதான். ஏனென்றால் இந்த வீதியில்தான் பெரிய நகை கடைகள், ஜவுளி கடைகள், ரெடிமேட் கடைகள், ஷாப்பிங் மால் போன்றவை அமைந்துள்ளன. எனவே நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து செல்வதால் காலை முதல் இரவு வரை இதனால்,  கீழராஜவீதி எப்போதுமே மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகவே  காணப்படும்.

இந்நிலையில், ஸ்டேஷனரி கடை நடத்தி வரும் கீழ இரண்டாம் வீதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மனைவி உண்ணாமலை மற்றும் அவரது மகளுடன்   கீழ ராஜ வீதியிலுள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நேற்று இரவு நடந்து  சென்றபோது  அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் உண்ணாமலையின் கழுத்தில் அனிந்திருந்த இருந்த 16 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த உண்ணாமலை சப்தமிட்டார். அதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள்  விரைந்து  சென்று மறைந்தனர். இது குறித்து  தகவலறிந்த புதுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார்   சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கிலியை பறிகொடுத்த பெண்ணிடமும் அப்பகுதியில் இருந்தவர்களிடமும் விசாரனை நடத்தினர். மேலும், அப்பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து நகர காவல் நிலைய போலீசார்  வழக்கு பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற குற்றவாளியை தேடிவருகின்றனர். 

புதுக்கோட்டையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கீழராஜ வீதியில் நடந்த சென்ற பெண்ணிடம்  சங்கிலி பறித்துச்சென்ற  சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. 


Top