06/Aug/2021 11:55:22
புதுக்கோட்டை, ஆக: தமிழ்நாடு அரசுக்கூட்டுறவுத் துறை ஊழியர் சங்க 33 -ஆம் ஆண்டு அமைப்பு தின கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு, மாவட்ட இணைச் செயலாளர் சங்கீதா தலைமை வகித்தார். தலைவர் விகேஏ.மனோகரன் வரவேற்றார். சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ரகுராம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்றனர்.