19/Feb/2021 11:31:44
ஈரோடு பிப்: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளமொடச்சசூர் ஊராட்சியில் மினி கிளினிக் மற்றும் சிறுவர் பூங்கா, படகுசவாரி குழாம் ஆகியவைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.
ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் வேட்டைக்காரன் கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர்கள் மினி கிளினிக்கை ஆய்வு செய்தார். தொடர்ந்து ரூ.5.37 கோடி மதிப்பில் இந்திராநகர் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள படகு சவாரி மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்காவையும் திறந்து வைத்த அமைச்சர்கள் குளத்தில் படகு சவாரி செய்தனர்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன், பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் ஈஸ்வரன், அந்தியூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணன், சிட்கோ வாரிய தலைவர் சிந்து ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.