logo
புதுக்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி வீடுகளை எம்எல்ஏ- முத்துராஜா ஆய்வு

புதுக்கோட்டை புறநகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி வீடுகளை எம்எல்ஏ- முத்துராஜா ஆய்வு

29/Jun/2021 04:05:44

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை புறநகரில் உள்ள குடிசை மாற்றுவாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா  செவ்வாய்க்கிழமை (29.6.2021) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் புதுக்கோட்டை சமத்துவபுரம் அருகே, பாலன் நகர் ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ. 120 கோடி  மதிப்பில் 1, 972 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இதையடுத்து  புதுக்கோட்டை எம்எல்ஏ முத்து ராஜா அப்பகுதிக்கு  நேரடியாகச்   சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ப்போது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் அழகுபொன்னையா, மற்றும் வீட்டு வசதி வாரிய பொறியாளர்கள், அதிகாரிகள். நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்டோர்  அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து எம்எல்ஏ- டாக்டர் முத்துராஜாவிடம் விளக்கி கூறியதுடன்  இதுவரை பயனாளிகளிடம் ஒப்படைக்காததற்கான காரணங்களையும்  தெரிவித்தனர்.

விளக்கங்களைக் கேட்டறிந்த எம்எல்ஏ முத்துராஜா பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒரு மாதத்துக்குள் (ஆவணி-1)    ஒப்படைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளி்ன் அறிவுறுத்தினார்இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் . நைனா முகமது, எம்.எம். பாலு, எம். லியாகத்அலி, சுப. சரவணன், சி. மதியழகன், டி. அப்புக்காளை உள்பட பலர் உடனிருந்தனர்.

 

.

Top