06/Aug/2021 02:35:56
புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது .
புதுக்கோட்டை இராணியார் மகப்பேறு மருத்துவமனையில் பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவுக்கு தலைவர் துரைமணி வகித்தார். சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையர் எஸ் .நாகராஜன் கலந்து கொண்டு, தாய்மார்களுக்கும் , கர்ப்பிணிகளுக்கும் சத்துணவு பாக்கெட், பேரீச்சை பழம்,பிஸ்கட், விழிப்புணர்வு கையேடு மற்றும் முககவசம் ஆகியவற்றை வழங்கினார்.
விழாவில், மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் அமுதா டாக்டர் பீட்டர் ஆகியோர் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து பேசினர். இதில், மருத்துவ கண்காணிப்பாளர், ரோட்டரி நிர்வாகிகள் கருப்பையா, ரவிச்சந்திரன் துணை ஆளுநர் ஆர்.கருணாகரன், பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுதாகர், சிவானந்தம், லெட்சுமணன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக மருத்துவர் சரவணன் வரவேற்றார். நிறைவாக செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.