logo
புதுக்கோட்டை மாவட்டத்தில்  மக்களைத் தேடி மருத்துவ திட்டம்: அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம்: அமைச்சர் ரகுபதி தொடக்கி வைத்தார்

05/Aug/2021 03:30:21

புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வி.கோட்டையூரில்  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்ற  மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தொடக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:  தமிழக முதலமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற சிறப்பான திட்டத்தினை,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடக்கி வைத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக,  புதுக்கோட்டை மாவட்டத்தில்  திருமயம் வட்டாரம், வி.கோட்டையூரில் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கலைஞரால்  2006-2011 ஆட்சிக் காலத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சியிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு, நோய் கண்டறியப்பட்டவா;;களுக்கு கலைஞா; காப்பீடு திட்டத்தின் கீழ் மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. 


தற்பொழுது அதைவிட கூடுதலாக தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கேற்ப தமிழக முதல்வர் ஸ்டாலின்  மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்தை  இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தொடக்கி வைத்துள்ளார்.

தற்பொழுது இல்லங்கள்தோறும் நேரடியாக சென்ற மருத்துவ சிகிச்சை அளிப்பதால் பொதுமக்கள் மிகுந்த பயன் பெறுவார்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப நோய் இல்லா சமுதாயம் படைக்கும் வகையில் தாயுள்ளத்துடன் மக்கள் நலனில் அக்கறையுடன் முதலமைச்சர்  செயல்பட்டு வருகிறார். மேலும் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

இந்நிகழ்வில், பொது சுகாதாரத் துணை இயக்குநர் பா.கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அழகு(எ)சிதம்பரம், வளர்மதி, ஊராட்சித் தலைவர் ராமதிலகம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

Top