logo
ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில் இன்று  அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் இன்று அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்

30/Jul/2021 11:35:26

ஈரோடு, ஜூலை: ஈரோடு  ஆட்சியர்  அலுவலகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். டி ஆர்ஓ முருகேசன் முன்னிலை வகித்தார். தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 18 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ .27 லட்சத்து 72 ஆயிரத்து 750 மதிப்பில்  திருமணம், கல்வி, கண் கண்ணாடி, ஓய்வூதியம் ,இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம்  உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

மேலும் 3411 நபர்களுக்கு நிலவை ஓய்வூதியம் ரூ.74 லட்சத்து 88 ஆயிரம் வழங்கப்பட்டன. மொத்தம் 4418 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே இரண்டு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஏஜி வெங்கடாசலம் எம்எல்ஏ, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் காயத்ரி உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆயிரம் நபர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து இலவசமாக தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்

Top