logo
கடும் பனிப்பொழிவு: மல்லிகைப்பூ கிலோ ரூ.3,132 -க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கடும் பனிப்பொழிவு: மல்லிகைப்பூ கிலோ ரூ.3,132 -க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி

22/Dec/2020 11:11:47

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முக்கிய நகங்களுக்கும் கோவை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

 இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது இதனால் மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ. 3,132 விலைக்கு  விற்பனையானது.

 சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டின் இன்றைய விலை நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ ரூ. 3,132-க்கும், முல்லை கிலோ ரூ.500-க்கும், காக்கடா கிலோ ரூ. 850-க்கும், செண்டு கிலோ ரூ. 81 -க்கும், ஜாதி முல்லை கிலோ ரூ. 750-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 600-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 50-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் சத்தியமங்கலம் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

                                                   


Top