logo
புதுக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

புதுக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

30/Jul/2021 06:11:12

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு மாணவர்களிடமிருந்து  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்:

 2021- ஆம் ஆண்டில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக 28.07.2021 வரை விண்ணப்பங்கள்; பெறப்பட்டு, மீண்டும் சேர்க்கைக்கான  கால அவகாசம் 4.8.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

 மேலும், பயிற்சிபெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகாலத்தின் போதே மூன்று மாதகால   Internship Training இறுதி ஆண்டு பயிற்சியாளர்களுக்கு தொழிற்திறன் மேம்பாட்டிற்காக வழங்கப்படுகிறது. தொழிற்கல்வி பெற்ற பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர், பணிநியமனம் சிறந்த நிறுவனங்களில் இருந்து கிடைக்க ஆவண செய்யப்படுகிறது.  மேலும் பயிற்சிக்காலத்தில் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை மாத ஊக்கத்தொகை பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில்  அரசு தொழிற் பயிற்சி நிலையம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்கள் மற்றும்; மாவட்ட  திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

எனவே மாணவர்கள் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அனைத்து  அசல் சான்றிதழ்களுடன் (மதிப்பெண் சான்றதழ், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம் -1) வந்து நேரடியாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம்.                

ஜுலை -2021 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற் பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ஆம் வகுப்பு தேர்ச்சி, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, மேலும் ஏப்ரல் 2021 -இல் தேர்ச்சி அடைந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண்ணை இணைக்கவேண்டும். 

பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.  தமிழகத்தில் உள்ள தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் ) தரப்பட்டுள்ளன. 

விண்ணப்ப கட்டணம் ரூ.50 -ஐ கிரடிட் கார்டு, டெபிட் கார்டு,  நெட் பேங்க் வாயிலாக செலுத்தலாம். மேலும் பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ் பாஸ், வரைபடக் கருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.750 வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் 4.8.2021 ஆகும். மேலும் விவரங்களுக்கு தொழிற் பயிற்சி நிலைய சேர்க்கை உதவி மைய கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். புதுக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலைய 04322-221584, 9486311243 என்ற அலைபேசி எண்ணிலோ, விராலிமலை அரசு தொழிற் பயிற்சி நிலைய 9865447581 என்ற அலைபேசி எண்ணிலோஇ உதவி இயக்குநர், புதுக்கோட்டை மாவட்ட திறன் பயிற்சி அலுவலக 9443184841 என்ற அலைபேசி எண்ணிலோ, புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக 04322-222287 என்ற தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம். 

Top