logo
ஈரோடு மாவட்டம், கோபி, கவுந்தபாடியில்  அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம், கோபி, கவுந்தபாடியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ஆர்ப்பாட்டம்

28/Jul/2021 10:03:51


ஈரோடு, ஜூலை: தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி ஈரோடு மாவட்டம், கோபி, கவுந்தபாடியில்  அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுகவினர் மீது போடப்படும் பொய்யான வழக்குகளை கண்டித்தும்,  அதிமுக. உரிமைக்குரல் முழக்கம் என்ற தலைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக. தலைமை அறிவித்திருந்தது.

 அதன்படி, கோபிச்செட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில் முன்னாள் அமைச்சரும் கோபி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன்  தனது வீட்டின் முன்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். இதில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா, குள்ளம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரி, ஒன்றியகவுன்சிலர் ரேவதி, எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சபேசன் ஆகியோர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.

இதைப்போல், கவுந்தப்பாடியில் முன்னாள் அமைச்சரும் பவானி எம்.எல்.ஏ-வுமான கே.சி.கருப்பணன்  தனது  வீட்டின் முன்பு கட்சியினருடன் இணைந்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். நம்பியூரில் ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணியம் தனது  வீட்டின் முன் கட்சியினருடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதைப்போல் மாவட்டம் முழுவதிலும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். 


Top